Published : 27 Mar 2025 07:55 AM
Last Updated : 27 Mar 2025 07:55 AM

அர்ஜெண்டினா கால்பந்து அணி அக்டோபரில் இந்தியா வருகை!

2022 உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் மெஸ்ஸி

புதுடெல்லி: லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் அக்டோபர் மாதம் இந்தியா வருகிறது. அந்த அணி கேரளாவில் நடைபெறும் கண்காட்சி போட்டியில் விளையாடுகிறது. மெஸ்ஸி 14 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில், கேரள விளையாட்டு அமைச்சர் அப்துரஹிமான், அர்ஜெண்டினா கேரளாவுக்கு வருகை தந்து கொச்சியில் 2 நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாடும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக இணைந்துள்ளது ஹெச்எஸ்பிசி வங்கி.

இந்த கூட்டணியின் கீழ், லயோனல் மெஸ்ஸியை உள்ளடக்கிய அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வருகை தந்து சர்வதேச கண்காட்சி போட்டியில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x