Published : 06 Oct 2024 07:15 AM
Last Updated : 06 Oct 2024 07:15 AM

மகளிர் கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே உண்டு உறைவிடப்பள்ளியில் சிபிஎஸ்இ தேசிய மகளிர் கால்பந்து போட்டி இன்று (6-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 9 மண்டலங்களைச் சேர்ந்த 30 பள்ளிகளைச் சேர்ந்த அணிகளும் மற்றும் துபாய் உள்ளிட்ட 3 வெளிநாடுகளைச் சேர்ந்த அணிகளும் கலந்து கொள்கின்றன.

இந்த போட்டியின் தொடக்க விழா இன்று காலை நடைபெறுகிறது. போட்டியை இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீராங்கனை ஷாலினி ஜெயராமன் தொடங்கி வைக்கிறார். சிபிஎஸ்இ சென்னை மண்டல அலுவலர் தினேஷ் ராம், ஆர்.எம்.கே குழுமத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.முனிரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x