Published : 28 Sep 2024 06:27 AM
Last Updated : 28 Sep 2024 06:27 AM

மக்காவு பாட்மிண்டன்: அரை இறுதியில் ட்ரீசா-காயத்ரி ஜோடி

மக்காவு: மக்காவு பாட்மிண்டன் தொடரில்இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.

மக்காவு நாட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் ஹிஸு யின்-ஹுய் - லோன் ஜிஹ் யுன் ஜோடியை வீழ்த்தியது அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள இந்திய ஜோடி, அரை இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-வதுஇடத்தில் உள்ள சீன தைபேவின் ஸியே பெய் ஷான் - ஹங் என் சூ ஜோடியை சந்திக்கிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 16-21,12-21 என்ற நேர் செட் கணக்கில் ஹாங் காங்கின் லாங் அங்குஸிடம் தோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x