Published : 17 Sep 2024 07:58 AM
Last Updated : 17 Sep 2024 07:58 AM

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா

ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா - தென் கொரியா அணிகள் மோதின.

இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் உத்தம் சிங் (13-வது நிமிடம்), ஜர்மான்பிரீத் சிங் (32-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (19 மற்றும் 45-வது நிமிடங்கள்) இரு கோல்களும் அடித்தனர்.

தென் கொரியா சார்பில் 33-வது நிமிடத்தில் யாங் ஜிஹூன் ஒரு கோல் அடித்தார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, சீனாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x