Published : 18 Aug 2024 08:28 AM
Last Updated : 18 Aug 2024 08:28 AM

புச்சிபாபு கிரிக்கெட் போட்டி: ஜார்க்கண்ட் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும் புச்சிபாபு கிரிக்கெட் போட்டியில் 12 அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன. திருநெல்வேலி ஐசிஎஸ்-சங்கர் நகர் மைதானத்தில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் அணிகள் விளையாடி வருகின்றன. மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களும், ஜார்க்கண்ட் அணி 289 ரன்களும் எடுத்தன.

பின்னர் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மத்தியபிரதேசம் நேற்று 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமாக விளையாடிய அனிக்கித் வர்மா 110 ரன்கள் எடுத்தார். இதையடுத்து யடுத்து ஜார்க்கண்ட் அணி 2-வது இன்னிங்ஸில் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேற்று விளையாடியது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஜார்க்கண்ட் அணி 2-வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடை பெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x