Published : 13 Aug 2024 07:37 AM
Last Updated : 13 Aug 2024 07:37 AM

லாட்வியா செஸ் போட்டியில் இனியன் சாம்பியன்

ஈரோடு: லாட்வியா நாட்டின் ரீகா நகரில் நடந்த 13-வது ரீகா டெக்னிகல் யூனிவர்சிட்டி சர்வதேச செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஈரோட்டைச் சேர்ந்த ப.இனியன் பங்கேற்றார். கடந்த 3-ம் தேதி முதல், 11-ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில், 24 நாடுகளில் இருந்து 240 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் இனியன் 10 புள்ளிகளை பெற்று பிளிட்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x