Published : 04 Aug 2024 04:00 PM
Last Updated : 04 Aug 2024 04:00 PM

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி

பாரிஸ்: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஷுட் அவுட்டில் 4 - 2 என்ற கணக்கில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பத்து வீரர்களுடன் களத்தில் விளையாட வேண்டிய சூழலில் இந்தியா இருந்தது. இந்நிலையில், 22-வது நிமிடத்தில் பெனால்டி ஷூட் அவுட்டின் போது கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வெற்றியை உறுதி செய்தார். வழக்கம்போல் ஹர்மான்ப்ரீத் சிங் இன்று சிறப்பாக விளையாடினார். பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 7-வது கோலை அவர் இன்று பதிவு செய்து கவனம் ஈர்த்தார். பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்திய ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்திருந்தது.

அரையிறுதியில் இந்தியா ஜெர்மனி அல்லது அர்ஜெண்டினா அணியில் ஏதேனும் ஒன்றை எதிர்கொள்ளலாம் எனக் கணிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x