Published : 03 Aug 2024 02:52 PM
Last Updated : 03 Aug 2024 02:52 PM

ஒலிம்பிக் வில்வித்தை: தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்திய வீராங்கனை தீபிகா குமாரி

பாரிஸ்: ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, ஜெர்மனியின் மிச்செல்லி க்ரோப்பனை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான வில்வித்தை தனிநபர் தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, ஜெர்மனியின் மிச்செல்லியை எதிர்கொண்டார். தொடக்கத்திலிருந்தே தீபிகா குமாரி ஆதிக்கம் செலுத்தி வந்தார். 27-24 புள்ளிகள் பெற்று முதல் செட்டில் 2-0 என முன்னிலை வகித்தார்.

இரண்டாவது செட்டில் 27-27 என்ற கணக்கில் சமன் செய்தார். மூன்றாவது செட்டில் 26-25 புள்ளிகளுடன் 5-1 என்ற நிலையில் தீபிகாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஆனால், 4-வது சுற்றில் 3-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீராங்கனை கை ஓங்கியது. 5-ஆவது செட் 27-27 என சமனில் முடிய, 6-4 என்ற கணக்கில் ஜெர்மனி வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிப் போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x