Published : 30 Jul 2024 08:04 AM
Last Updated : 30 Jul 2024 08:04 AM

ஒலிம்பிக் வெண்கலப் பதக்க சுற்றில் மனு பாகர் - சரப்ஜோத் ஜோடி

மனு பாகர் - சரப்ஜோத்

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பக்கத்துக்கான சுற்றுக்கு முன்னேறியது.

33-வது ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது.இதில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தமனு பாகர் போட்டியின் 3-வது நாளான நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான தகுதி சுற்றில்சரப்ஜோத் சிங்குடன் இணைந்து களமிறங்கினார். 17 ஜோடிகள் கலந்து கொண்ட இந்த பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் ஜோடிகள் பதக்க சுற்றுக்கு முன்னேறும்.

இதில் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி 580 புள்ளிகளை குவித்து 3-வது இடம் பிடித்து பதக்க சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடியானது கொரியாவின் ஓ யே ஜின், லீ வோன்ஹோ ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கொரியா ஜோடி தகுதி சுற்றில் 579 புள்ளிகளை குவித்து 4-வது இடம் பிடித்திருந்தது.

மற்றொரு இந்திய ஜோடியான ரிதம் சங்க்வான், அர்ஜூன் சிங் சீமா ஜோடி 576 புள்ளிகளை சேர்த்து 10-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. துருக்கியின் தர்ஹான் செவ்வால், யூசுப் டிகெக் ஜோடி 582 புள்ளிகளுடன் முதலிடமும், செர்பியாவின் ஸோரானா அருனோவிக், டாமிர் மிகெக் 581 புள்ளிகளையும் குவித்து தங்கப் பதக்கத்துக்கான சுற்றுக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x