Published : 10 Jul 2024 08:34 PM
Last Updated : 10 Jul 2024 08:34 PM

3-வது டி20: ஜிம்பாப்வே அணியை 23 ரன்களில் வீழ்த்தியது இந்தியா!

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2-1 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், 1-1 என்ற சமநிலையில் 3வது போட்டியை இரு அணிகளும் எதிர்கொண்டன. ஹராரே நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷூப்மன் கில் இணை சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

9-வது ஓவரில் ஜெய்ஸ்வால் 36 ரன்களுக்கு விக்கெட்டானார். அடுத்து வந்த அபிஷேக் சர்மா 10 ரன்களுக்கு அவுட்டாக, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய 66 ரன்களைச் சேர்த்து அசத்தினார். ருதுராஜ் 49 ரன்களில் விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 182 ரன்களை சேர்த்தது.

183 வெற்றி இலக்கை துரத்திய ஜிம்பாப்வேவின் ஓப்பனர் வெஸ்லி 1 ரன்னுக்கு அவுட்டானார். தடிவானாஷே 13 ரன்களுக்கும், பிரையன் பென்னட் 4 ரன்களுக்கும் விக்கெட்டாக, ஜிம்பாப்வே தடுமாறியது. சிக்கந்தர் ராசா 15 ரன்களிலும், ஜொனாதன் காம்ப்பெல் 1 ரன்னிலும் கிளம்பினர். டியான் மியர்ஸ் 65 ரன்களையும், கிளைவ் மடாண்டே 37 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

மற்றவர்கள் யாரும் சோபிக்காத நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே 159 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற நிலையில் டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி தரப்பில், வாஷிங்கடன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும். அவேஷ் கான் 2, கலீல் அகமது 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x