Published : 08 Jul 2024 07:23 AM
Last Updated : 08 Jul 2024 07:23 AM

சென்னையில் வரும் 13 முதல் முதியோர் டி20 கிரிக்கெட்

தமிழ்நாடு கிரிக்கெட் மூத்தோர் சங்கம் சார்பில் 50 பிளஸ் வயதினருக்கான டி.எஸ்.மகாலிங்கம் டிராபி டி20 கிரிக்கெட் தொடர் குறித்த அறிவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள்.

சென்னை: சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் மூத்தோர் சங்கம் சார்பில் 50 பிளஸ் வயதினருக்கான டி.எஸ்.மகாலிங்கம் டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வரும் 13-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்தத் தொடர் ஜூலை 28-ம் தேதி வரை சென்னை தாம்பரத்தில் உள்ள ரெட்டி சுமங்கலி டர்ஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் விசிஏ, எம்சிசி, ஐஎன்எஸ்சி, ஐஎஃப்சிஆர், ஜிஎன்எஸ்சி, கோவை, சிடிசிஏ, எம்ஜிசி, எம்ஆர்சி, காஸ்மோ பாலிட்டன் ஆகிய 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 3 லீக் ஆட்டங்களில் விளையாடும். வெற்றி பெறும் அணிக்கு நான்கு புள்ளிகள் வழங்கப்படும்.

லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இறுதி போட்டி 28-ம் தேதி நடைபெறுகிறது.

ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் 50 வயதுக்கு மேற்பட்டோராகவும், 2 வீரர்கள் 41 முதல் 45 வயதுக்குட்பட்டவராகவும், 2 வீரர்கள் 46 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்கவேண்டுமென போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போட்டியானது தமிழ்நாடு மூத்த வீரர்கள் கிரிக்கெட் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு போட்டியாக நடைபெறுகிறது. இந்த தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க டிவிஷனில் 4 மற்றும் 5-ல் விளையாடும் வீரர்களும் பங்கேற்கலாம். போட்டியின் தொடக்கநாளில் 10 அணிகளின் கேப்டன்களும் தங்கள் அணியின் நினைவாக மரக்கன்றுகளை நடுகின்றனர்.

இத்தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் மூத்தோர் சங்கத்தின் செயலாளர் வெங்கட் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது சங்கத்தின் தலைவர் கிருஷ்ணா, நிர்வாகிகள் பாலாஜி, தர், சுரேஷ்குமார், ரவிசங்கர், பி.எஸ்.ராகவன், திருமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x