Published : 24 Jun 2024 08:33 AM
Last Updated : 24 Jun 2024 08:33 AM

டி20 உலகக் கோப்பையில் அரை இறுதி வாய்ப்பு யாருக்கு...?

கிங்ஸ்டவுன்: சூப்பர் -8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ளன. இதில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிக்குச் செல்லும்.

தற்போது இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியின் நிகர ரன் விகிதம் 2.425-ஆக உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று 3-வதுஇடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் விகிதம் 0.223-ஆகஉள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியும் 2 போட்டிகளில விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் விகிதம் -0.650-ஆக உள்ளது. வங்கதேச அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி கண்டு கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் எளிதில் அரை இறுதிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை இந்தியா தோல்வி கண்டால் ஆஸ்திரேலியா, இந்தியா தலா 4 புள்ளிகளைப் பெற்றிருக்கும். இதைத் தொடர்ந்து நாளை ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 4 புள்ளிகளைப் பெறும். அப்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். இதில் நிகர ரன் விகிதம் அதிகமாக பெற்று முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் அரை இறுதிக்குச் செல்லும்.

ஒருவேளை வங்கதேசத்துடனான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடையும்பட்சத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு எளிதாகச் செல்லும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x