Published : 03 Apr 2024 08:14 AM
Last Updated : 03 Apr 2024 08:14 AM

ஆசிய அட்யா பாட்யா சாம்பியன்ஷிப்: இந்திய அணிகள் சாம்பியன்

சென்னை: நேபாளம் அட்யா பாட்யா கூட்டமைப்பு சார்பில் முதலாவது ஆசிய அட்யா பாட்யா சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மார்ச் 28 முதல் 31-ம் தேதி வரை காத்மாண்டுவில் நடைபெற்றது. இதில் நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் பங்கேற்றன. போட்டிகள் லீக் மற்றும் நாக் முறையில் நடத்தப்பட்டன.

இதில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 32-21,28-20 என்ற நேர் செட் கணக்கில் பூடான் அணியை வீழ்த்தியது. மகளிருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 23-17, 26-19 என்ற நேர் செட்டில் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த தொடரில் பங்கேற்ற இந்திய ஆடவர் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் இடம் பெற்றிருந்தார். மகளிர் அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி, ஸ்ரீமதி ஆகியோர் விளையாடி இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x