Published : 03 Aug 2014 10:00 AM
Last Updated : 03 Aug 2014 10:00 AM

காமன்வெல்த் பாட்மிண்டன்: காஷ்யப்புக்கு வெள்ளி உறுதி

காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார்.

சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் காஷ்யப் 18-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ராஜீவ் அவுசெப்பை தோற்கடித்தார். இதன்மூலம் கடந்த காமன்வெல்த் போட்டியில் ராஜீவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ள காஷ்யப், இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் சிங்கப்பூரின் டெரீக் வாங்கை சந்திக்கிறார்.

சிந்து தோல்வி

மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் 2-வது முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து 20-22, 20-22 என்ற நேர் செட்களில் கனடாவின் மிச்செல்லே லீயிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். மற்றொரு ஆடவர் அரையிறுதியில் இந்தியாவின் குருசாய் தத் 21-16, 19-21, 15-21 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் டெரீக் வாங்கிடம் தோல்வி கண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x