Published : 01 Jan 2024 05:47 AM
Last Updated : 01 Jan 2024 05:47 AM

இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப் பயிற்சி

ரவீந்திர ஜடேஜா

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவுடனான 2-வது கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் நோக்கில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று தீவிர வலைப் பயிற்சி மேற்கொண்டனர்.

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் வரும் 3-ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து இந்த 2-வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் நேற்று காலை தீவிர உடற்பயிற்சி செய்தனர். அதன் பின்னர் வலைப்பயிற்சியில் இறங்கி பந்துவீச்சு, பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நேற்றைய பயிற்சியின்போது கேப்டன் ரோஹித் சர்மா தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

ஆனால் நேற்றைய பயிற்சியின்போது கேஎல் ராகுல், விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவில்லை. ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா மட்டும், நீண்ட நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். ரோஹித் சர்மாவுடன் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் வலைப் பயிற்சியை தொடங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x