Published : 28 Jul 2014 11:18 AM
Last Updated : 28 Jul 2014 11:18 AM

காமன்வெல்த்: ஸ்குவாஷ் - அரையிறுதியில் கோஷல்

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சௌரவ் கோஷல் அரையிறுதியில் முன்னேறியுள்ளார். 1998-ல் காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் சேர்க்கப்பட்ட பிறகு அதில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் கோஷல்தான்.

சனிக்கிழமை காலிறுதியில் கோஷல் 8-11, 7-11, 11-6, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் கேம்ப்பெல் கிரேசனை தோற்கடித்தார். வெற்றி குறித்துப் பேசிய கோஷல், “இது கடும் சவால் நிறைந்த போட்டி. எனினும் இறுதியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியா வின் தீபிகா பலிக்கல் 11-8, 2-11, 9-11, 6-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் அலிசன் வாட்டர்ஸிடம் தோல்வி கண்டு போட்டிலிருந்து வெளி யேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x