Published : 13 Oct 2023 07:05 AM
Last Updated : 13 Oct 2023 07:05 AM

“முடிவுகளை பார்ப்பது இல்லை” - இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா

பும்ரா

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 272 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதில் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்து வீச்சு முக்கிய பங்குவகித்தது. அவர், 10 ஓவர்கள் வீசி 39 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டி முடிவடைந்ததும் பும்ரா கூறும்போது, “நான் முடிவுகளை எதிர்பார்த்து பந்துவீசுவதில்லை. 4 விக்கெட்டுகளை எடுத்து விட்டதால் மட்டும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று அர்த்தம் ஆகாது. 4 விக்கெட்டுகளை எடுத்ததால் நான் பெரிதாக எதனையும் சாதித்து விட்டேன் என்றும் கிடையாது. தொடர்ந்து சிறப்பாக பந்துவீசுவதில் கவனம் செலுத்துகிறேன். அதுதான் மிகவும் முக்கியம். ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை கணித்து அதற்கேற்ப பந்துவீசுகிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x