Published : 31 Jul 2014 12:00 AM
Last Updated : 31 Jul 2014 12:00 AM

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ மகளிர் கல்லூரி சார்பில் ‘வாஸ்போ 2014’ என்ற பெயரில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான 3 நாள் விளையாட்டுப் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

10-வது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியின் தொடக்க விழாசென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை இயக்குநர் டாக்டர் வி.மகாதேவன் போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.

வாலிபால், கூடைப்பந்து, எறிபந்து, செஸ், டேபிள் டென்னிஸ் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. வாலிபால், எறிபந்து ஆகிய போட்டிகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ராதாகிருஷ்ணன் மைதானத்திலும், கூடைப்பந்து போட்டி (காலையில் 6.30 முதல் 9 மணி வரை, மாலையில் 4 முதல் 7 மணி வரை) தியாகராய நகரில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலிலும் நடைபெறுகின்றன.

செஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வைஷ்ண கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றன. 3 நாள்களும் போட்டிகள் நடைபெறும். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1000 பேர் கலந்துகொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x