Published : 26 Mar 2023 04:42 AM
Last Updated : 26 Mar 2023 04:42 AM

திருப்பதி ஏழுமலையான தரிசிக்க ஆன்லைனில் நாளை ரூ.300 டிக்கெட் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிக்க நாளை திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது.

ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்கள் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் அதிகளவில் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வருவர் என எதிர்பார்ப்பதால், முன்கூட்டியே ஆர்ஜித சேவைகள், ரூ. 300 சிறப்பு தரிசனம் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையத்தில் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் திங்கட்கிழமை 27-ம் தேதி காலை 11 மணிக்கு வரும் ஏப்ரல் மாதம் ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக ஆன்லைன் மூலம் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட உள்ளது.

இதற்காக திருப்பதி தேவஸ்தான இணையதளமான tirupatibalaji.ap.gov.in என்கிற இணைய முகவரியிலோ அல்லது திருப்பதி தேவஸ்தானத்தின் TTDDEVASTHANAMS என்கிற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாகவோ பக்தர்கள் தங்களது டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x