Published : 12 Mar 2023 04:46 AM
Last Updated : 12 Mar 2023 04:46 AM

வரும் 22-ம் தேதி திருமலையில் உகாதி ஆஸ்தானம்

திருமலை: தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை இம்மாதம் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, திருமலையில் அன்றைய தினம் மூலவருக்கு புதிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, உற்சவர்கள், தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்படும். பின்னர் அனைவருக்கும் ‘உகாதி பச்சடி’ பிரசாதமாக வழங்கப்படும்.

21-ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன சேவை நடத்தப்பட உள்ளது. இதில், பல்வேறு வாசனை திரவியங்களால் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட உள்ளது. அதனால் அன்று அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் 21-ம் தேதி மற்றும் 22-ம் தேதி ஆகிய இரு நாட்களும் விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x