Published : 17 Jan 2024 04:06 AM
Last Updated : 17 Jan 2024 04:06 AM

ஸ்ரீரங்கம் கோயிலில் தங்கக் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பாரி வேட்டையை முன்னிட்டு தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த நம்பெருமாள்.

திருச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று முன்தினம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார்.

தொடர்ந்து, மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நேற்று காலை 8.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கனு மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு பாரிவேட்டை நடத்திய படி தெற்கு வாசல் கடை வீதிகளில் உலா வந்தார். அதன் பின், மூலஸ் தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x