Published : 07 Jan 2024 04:02 AM
Last Updated : 07 Jan 2024 04:02 AM

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நாளை மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை

காஞ்சிபுரம்: காஞ்சி மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனை நிகழ்ச்சி ஜன. 8-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

இவரது 30-வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் ஜன. 8-ம் தேதி ( நாளை ) நடைபெறுகிறது. இதையொட்டி மஹா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் நான்கு ராஜ வீதிகளிலும் புறப்பாடு நடைபெறுகிறது. தேனம்பாக்கத்தில் உள்ள மடத்திலும் மஹாருத்ர ஜபம், ஹோமம் ஆகியவை நடைபெறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x