Published : 25 Oct 2023 04:20 AM
Last Updated : 25 Oct 2023 04:20 AM

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் 4 நாட்கள் அனுமதி

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டுக்காக பக்தர்களுக்கு 4 நாட்கள் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்கு வரும் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறிச் சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் மலையேற தடை விதிக்கப்படும். வரும் 28-ம் தேதி பவுர்ணமியன்று அன்னாபி ஷேகம் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x