Published : 12 Oct 2023 04:02 AM
Last Updated : 12 Oct 2023 04:02 AM

உதகை தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா

உதகை: ஆண்டுதோறும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் அக்டோபர் மாதத்தில் ஜெபமாலை அன்னையின் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் அனுமதியின் பேரில் பங்குத்தந்தை ரவி லாரன்ஸ் தலைமையில், வாழும் ஜெபமாலை குழுவோடு இணைந்து ஜெபமாலை ஜெபித்து வழிபாடு நடத்தப்பட்டது.

உதகை தூய இருதய ஆண்டவர் பேராலயம் சுமார் 800-க்கும் அதிகமான குடும்பங்களை கொண்டுள்ளது. அந்தந்தப் பகுதி வாரியாக சுமார் 32 அன்பியங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பங்கு தந்தையர், வாழும் ஜெபமாலை உறுப்பினர்கள், கன்னியர்கள் இணைந்து 32 அன்பியங்களுக்கும் தினந்தோறும் சென்று பொதுவான இடத்தில் ஜெபமாலை வழிபாடு நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x