Published : 25 Jun 2024 05:51 PM
Last Updated : 25 Jun 2024 05:51 PM

பிருத்விராஜின் ‘குருவாயூர் அம்பலநடையில்’ ஜூன் 27-ல் ஓடிடியில் ரிலீஸ்!

சென்னை: பிருத்விராஜ் நடித்துள்ள ‘குருவாயூர் அம்பலநடையில்’ மலையாள திரைப்படம் வரும் 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான மலையாள படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. இப்படம் மலையாள ரசிகர்கள் தாண்டி பலரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப் பெற்றது. விபின் தாஸ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘குருவாயூர் அம்பலநடையில்’. இந்தப் படத்தில் பசில் ஜோசப், பிருத்விராஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார் யோகிபாபு. நிகிலா விமல், அனஸ்வர ராஜன், ஜெகதீஷ், ரேகா, சிஜு சன்னி, இர்ஷாத் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பயனாக உலகம் முழுவதும் ரூ.90 கோடியை வசூலித்தது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x