Published : 07 May 2016 10:22 AM
Last Updated : 07 May 2016 10:22 AM

தி இந்து பொதிகை தொலைக்காட்சி இணைந்து வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் தொடர்: 34-வது வாரமாக இன்று ஒளிபரப்பாகிறது

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் வாழ்க்கையை மையமாக வைத்து பொதிகை தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகி வரும் ‘குறை யொன்றுமில்லை’ வாழ்க்கைத் தொடரில் இன்று (சனிக்கிழமை) ஆனந்தி - ராதா ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் இடம்பெற உள்ளது.

‘தி இந்து’ நாளிதழுடன் இணைந்து பொதிகை தொலைக் காட்சி வழங்கி வரும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய தொடரில் கடந்த சில வாரங்களாக ‘மீரா’ படத்தின் சுவையான காட்சிகளும், பாடல் களும் இடம்பெற்றன. இன்றைய தினம் ஒளிபரப்பாகும் 34-வது அத்தி யாயத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் கணவர் சதாசிவத்தின் முதல் மனைவி பார்வதி - சதாசிவம் தம்பதிக்கு பிறந்த ராதா மற்றும் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியின் மகள் ஆனந்தி இருவரது பரதநாட்டிய அரங்கேற்றம் ஒளிபரப்பாகவுள் ளது. இதில், வழுவூர் ராமய்யாப் பிள்ளையிடம் அவர்கள் பரதம் பயின்றது, அரங்கேற்றத்துக்கு உடை, பாடல்கள், நிகழ்ச்சி நிரல் உருவானது உள்ளிட்ட சுவாரஸ் யமான விஷயங்கள் இடம்பெறும். இந்த அத்தியாயத்தில் அரிதான பல புகைப்படங்களும் இடம்பெற உள்ளன.

சனிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காணலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x