Published : 25 Sep 2015 10:42 AM
Last Updated : 25 Sep 2015 10:42 AM

உங்கள் குரல்: வழக்கில் சிக்கிய வாகனங்களால் அவதி

திருநின்றவூர் காவல் நிலையம் கிருஷ்ணாபுரம் 1-வது தெரு அருகில் உள்ளது. இங்கு பதிவு செய்யப்படும் வழக்குகளில் சிக்கிய வாகனங்கள், 1-வது தெருவில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காவல் நிலையத்துக்கு வருபவர்கள், இந்த வாகனங்களின் மறைவில் சிறுநீர் கழிப்பதால், இத்தெருவில் தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.முருகையன், திருநின்றவூர்

வாகன சோதனையால் போக்குவரத்து நெரிசல்

எண்ணூர் துறைமுகத்துக்கு வந்துசெல்லும் கன்டெய்னர் லாரிகள் எண்ணூர் - மீஞ்சூர் சாலையில் இயக்கப்படுகின்றன. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் கன்டெய்னர் லாரிகளையும் சோதனை செய்து வருகின்றனர். இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ்கூட செல்ல முடிவதில்லை. நேரத்தோடு அலுவலகம் செல்ல முடிவதில்லை. வீடு திரும்பவும் தாமதமாகிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.அழகுசுந்தரம், வெள்ளிவாயல்சாவடி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x