Published : 25 Sep 2015 10:43 AM
Last Updated : 25 Sep 2015 10:43 AM

உங்கள் குரல்: குடிநீருடன் புழுக்கள் குடிக்க முடியாத அவலம்

சென்னை மாநகராட்சியின் 127-வது வார்டுக்கு உட்பட்ட கோயம்பேடு பகுதியில் குடிநீர் குழாயில் வரும் நீருடன் சிவப்பு நிற புழுக்களும் கலந்து வருகின்றன. இதனால் குடிநீர் வாரியம் விநியோகிக்கும் குடிநீரை நாங்கள் பயன்படுத்துவதே இல்லை. சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வாசகி, கோயம்பேடு

நந்தனத்தில் வருமா நடை மேம்பாலம்?

சென்னை அண்ணா சாலையில் எப்போதும் அதிக போக்குவரத்து இருந்து வருகிறது. இந்த நிலையில் நந்தனம் பஸ் நிறுத்தத்தில் இருந்து எதிர் சாலைக்குச் செல்ல, ஆபத்தான முறையில் சாலையை கடக்கவேண்டி உள்ளது. சிலர் விபத்திலும் சிக்கியுள்ளனர். அதனால் அப்பகுதியில் நடை மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.பிரவீன், சைதாப்பேட்டை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x