Published : 09 Jul 2015 06:03 PM
Last Updated : 09 Jul 2015 06:03 PM

தீவு மக்களை வெளியேற்ற வேண்டும்: மனோகரன்

செய்தி:>புவி வெப்பமயமாதலினால் முதலில் அழியப்போகும் நாடு: துவாலு பிரதமர் உருக்கம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஆர்.எம்.மனோகரன் கருத்து:

பூமி வெப்பமயமாவதைத் தடுக்க அல்லது குறைக்க எந்த நாடுகளும் எந்த செயல்பாடுகளிலும் இறங்கவில்லை. பேச்சு இருக்கிறது. ஆனால் போர்க்கால நடவடிக்கை இல்லை. துவாலு பிரதமர் தன் தீவு நாடு அழியப்போகும் நிலையில் இருக்கிறது என்கிறார்.

மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. பூமியின் வெப்பத்தால் ஆர்க்டிக், அண்டார்டிக் பனிக் கடல்கள் உருகி பசிபிக், அட்லான்டிக் கடல்கள் உயரத்தொடங்கியுள்ள நிலையில் அதன் வாயிலாக துவாலு தீவு கடலால் சூழப்பட்டு வருகிறது.

தற்போதைக்கு உடனடித்தீர்வு அந்த நாட்டின் 10000 மக்களையும் மற்ற உயினங்களையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடியேற்றம் செய்வதுதான். வேறு உடனடித்தீர்வு ஏதுமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x