Published : 02 Jul 2015 05:07 PM
Last Updated : 02 Jul 2015 05:07 PM

பாதசாரிகளுக்கு அச்சம்தரும் குவாரி வாகனங்கள்: சேவியர்

செய்தி: கன்னியாகுமரியின் இயற்கை வளங்களை சுரண்டி கேரளாவுக்கு தாரைவார்க்கும் தமிழக குவாரிகள்

தி இந்து ஆன்லைன் வாசகர் அந்தோணிமுத்து சேவியர் கருத்து:

தோவாளையில் இருந்து மைலாடி போகும் சாலை. இதில் உள்ளது கோழிகொட்டுப்போத்தை. இந்த பொத்தையில் உள்ள பாதி குன்று காணாமல் போன காட்சியை பார்க்கலாம். கேப்பாரில்லை. மீறிக் கேட்டால் கேட்டவர் காணாமல் போகும் துயரம் உள்ளது.

குமரி மாவட்டத்தை விடுங்கள். இங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்ன வாழ்கிறது? தேசிய நெடுஞ்சாலையே இந்த குவாரிகளில் இருந்து எடுத்து செல்லப்படும் கல், ஜல்லி, மணல் டிப்பர் லாரிகளுக்குத்தான் சொந்தம். மற்ற வாகனங்கள் இந்த எம வாகனங்கட்கு பயந்து ஒதுங்க வேண்டும். பாதசாரிகள் பயந்து ஓட வேண்டும்.

இங்கு ஹெல்மட் அணிந்தும் பயன் இல்லை. ஒட்டு மொத்த ஊழல். சபிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? அறியாமையில் வாழும் மக்கள் பணபேராசை கொண்ட ஆள்வோர், அரசியல்வாதிகள் தொடர்பு கொண்ட புள்ளிகள் இருக்கும் வரை இது தொடரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x