Published : 01 Jun 2015 04:13 PM
Last Updated : 01 Jun 2015 04:13 PM

மருத்துவர்கள் பணம் பிடுங்குபவர்களா? - ஹரிநாதன்

தலையங்கம்:>இந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஹரிநாதன் கருத்து:

அனைத்து மருத்துவர்களையும் குறை கூறுவது தவறு. எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. சென்னையில் புகழ் பெற்ற ஒரு மருத்துவரிடம் கடந்த 5 ஆண்டுகளாக ஆலோசனை பெற்று வருகிறேன்.

அவரிடம் செல்லும்போது, என்னுடைய மாதந்திர சோதனை முடிவுகளை பார்த்ததும் அவர் நிறைய ஆலோசனைகள் சொல்லுவார். நீங்கள் தவறாது நடை பயிற்சி செய்ய வேண்டும், உணவு கட்டுப்பாடு வேண்டும். மாதா மாதம் இரத்த பரிசோதனை வீட்டிலேயோ அல்லது சோதனை கூடத்திலேயோ செய்து கொள்ள வேண்டும். இந்த மூன்றும் சரியாக கடைபிடித்தால் என்னிடம் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக்காக வந்தால் போதும் என்று கூறினார்.

என் மனைவிக்கு தோள் தசைப் பிடிப்புக்கு இன்னொரு புகழ் பெற்ற மருத்துவரை அணுகியபோது இந்த வலிக்கு எந்தவித அறுவை சிகிச்சையும் தேவையில்லை. ஒரு வாரம் மட்டும் மாத்திரை வலி வரும்போது சாப்பிட்டால் போதும். இந்த வலி ஒரு நாளிலோ அல்லது ஒரு வருடத்திலோ குறையும். வேறு எந்த சிகிச்சையும் தேவை இல்லை என்றார். எனவே அனைத்து மருத்துவர்களும் பணம் பிடுங்குபவர்கள் என்ற தவறான எண்ண வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x