Published : 11 Jun 2015 02:21 PM
Last Updated : 11 Jun 2015 02:21 PM

நீராதாரங்களை மாசின்றி விட்டுச் செல்வோம்: ஸ்ரீனிவாசன்

கட்டுரை:>ஒரு நதியின் வாக்குமூலம்: துடிக்கிறாள் படியளக்கும் பவானி!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஸ்ரீனிவாசன் கருத்து:

ஒரு நதியின் வாக்குமூலம்: துடிக்கிறாள் படியளக்கும் பவானி! மிகவும் அருமையானப் பதிவு. ஓர் ஆறு என்றால் அதன் முழுப்பதம், ஆறு மட்டுமல்ல; அந்த ஆற்றில் வசிக்கும் உயிரினங்கள், ஆற்றை ஆதாரமாகக் கொண்டுள்ள வனங்கள், வன உயிரினங்கள், ஆற்றங்கரையோர மனிதச் சமூகங்கள் எல்லாம் சேர்ந்தவையே.

ஓர் ஆறு பல்லுயிர் வளமையாக இருந்தால் மட்டுமே இவை எல்லாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதனைப் போன்றே ஓர் ஆற்றின் அழிவு என்பது அதன் அழிவு மட்டுமல்ல; நமது அழிவும்தான். மிகவும் அழகாக விளக்கி இருக்கின்றார்.

எப்படி நம் முன்னோர்கள் இந்த நீர் ஆதாரங்களை நம்மிடம் எந்தவிதமான மாசுபாடுகள் இன்றி நம்மிடம் தந்து விட்டுச் சென்றார்களோ அதனைப் போன்றே நாமும் நம்து எதிர்காலச் சமுதாயத்திற்கு இந்த நீர் ஆதாரங்களை எந்தவிதமான மாசுபாடுகள் இன்றி தந்து விட்டுச் செல்ல வேண்டாமா! சற்றே சிந்திப்போமா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x