Published : 12 Jun 2015 06:49 PM
Last Updated : 12 Jun 2015 06:49 PM

பழைய சிறப்புகளை மறைக்கிறது மோடி அரசு: அருள்

செய்தி:>யோகா தினத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு; கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிருப்தி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் அருள் கருத்து:

யோகாவிற்கும் நாட்டை ஆள்பவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை? ஆட்சியாளர்கள் இதை பெரிதுபடுத்தி இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்த்தால் இதற்குப் பின் அவர்களுக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது. அரசு மக்களுக்கு செய்யவேண்டிய வேலைகள் எவ்வளவோ உள்ளபோது இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அனேகமாக நம் நாட்டில் மட்டும்தான் இருக்கும்.

ஒவ்வொரு நாட்களுக்கும் இருக்கும் பழைய சிறப்புகளை மறைய செய்துவிட்டு இவர்கள் விரும்பிய தினங்களாக மாற்றுவதற்கான வேலையை வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் செய்து கொண்டிருக்கிறது மோடி அரசு. முதலில் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றினார்கள், அப்புறம் அந்தக் கட்சி தலைவர்களின் நினைவுகளோடு இருக்கும் நாட்களின் பெயரை மாற்றினார்கள், இப்போ யோகாவில் வந்து நிற்கிறார்கள்.

நாட்டில் வேறு பிரச்சனயே இல்லையா? அது சரி உருப்படியாக ஏதாவது தெரிந்தால்தானே செய்வதற்கு. மத சம்பந்தப்பட்ட கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் டெக்னாலஜியை பற்றியா பேசுவார்கள்? யோகா, ஜோசியம், கோவில் இதைப்பற்றித்தான் பேசுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x