Published : 11 Jun 2015 02:20 PM
Last Updated : 11 Jun 2015 02:20 PM

கார்ப்பரேட்டுகளிடமிருந்து அறிவியலை மீட்போம்: வெண்ணிலா

கட்டுரை:>ஐஐடி என்றால் எல்லோருக்கும் மேலானவர்களா?

'தி இந்து' ஆன்லைன் வாசகர வெண்ணிலா கருத்து:

மக்களால் "அறிவியல்" சமூகத்திடமிருந்து பிரிக்கப்படுவதில்லை. உண்மையில் அறிவியல், கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகளை பன்னாட்டு நிறுவன முதலாளிகள் சிறைப்படுத்தி வைத்திருப்பதால், ஆளும் வர்க்கம்தான் "அறிவியலை" மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

அரசு இந்நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு மூளை ஏற்றுமதிக்கும், எந்திர விஞ்ஞானிகளை உருவாக்கவதற்கான கல்வி தருபவையாக பயன்படுத்துகிறது. ஆகவேதான் அங்கே சமுகம் சார்ந்த கருத்துக்கள் தடுக்கப்படுகின்றன. ஆக மாணவர்களின் கருத்துரிமைக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நம் விஞ்ஞானிகளையும், அறிவியலையும் பன்னாட்டு நிறுவன ஆதிக்கத்திலிருந்தும், ஆளும் வர்க்கத்திடமிருந்தும் மீட்க வேண்டும். தேசிய அறிவியல் கல்வி கொள்கைகளைக் கொண்ட தேசிய உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்கப் போராட வேண்டும். நில பிரபுத்துவ சமூகத்திடமிருந்து "அறிவியலை" முதலாளித்துவம் விடுவித்தது. முதலாளித்துவ சிறையில் இருந்து "அறிவியலை" மக்கள் விடுதலை செய்வர்.

கட்டுரையாளர் குறிப்பிட்ட யதார்த்த உலகோடும் மக்களோடும் "அறிவியல்" ஒன்றிணையும் காலம் மக்கள் அரசு உள்ள காலமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x