Published : 13 Jun 2015 04:52 PM
Last Updated : 13 Jun 2015 04:52 PM

கவலைக்கிடமான நிலையில் அனல்மின் திட்டங்கள்! - சுந்தரராஜ்

செய்தி:>ரூ.1,400 கோடியில் சூரிய மின் உற்பத்தி திட்டம்: தமிழக அரசுடன் அதானி குழுமம் ஒப்பந்தம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சுந்தரராஜ் கருத்து:

கடந்த மூன்று ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தியை பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் தமிழக அரசு 5% உற்பத்தியை மட்டுமே அடைந்துள்ளது. 2015-ம் ஆண்டுக்குள் 3000 மெ.வாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்ற தமிழக அரசின் திட்டம் பெரிய அளவில் பலனளிக்காத சமயத்தில் அதானி குழுமத்தின் சூரிய மின் தொழிற்சாலை முதலீடு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

செயல்பாட்டிலுள்ள அனல்மின் நிலையங்களின் பிஎல்எஃப் உயர்த்துவதின் மூலமும், கொதிகலன் அடிக்கடி வெடிப்பதினால் ஏற்படும் உற்பத்தி இழப்பை தவிர்த்தாலே போதும். கொதிகலனுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை சரியான முறையில் வாட்டர் கெமிக்கல் ட்ரீட்மெண்ட் செய்வதன் மூலம் வாட்டர் கெமிஸ்ட்ரி மானிட்டர் செய்வதன் மூலமும் 80% வெடிப்பை தவிர்க்கலாம்.

அரசு நிர்ணயிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்த முடியாத சூழ்நிலையில், புதிய ஒப்பந்தம் போட முனைவது விவேகமல்ல. அதானியை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த அ.தி.மு.கவிற்கு இது தருணம் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x