Published : 25 Jun 2015 02:26 PM
Last Updated : 25 Jun 2015 02:26 PM

காமராஜருக்குப் பிறகே காங்கிரஸ்(ஐ): பெரியசாமி

புகைப்படத் தொகுப்பு:>நெருக்கடி நிலையின் 40 ஆண்டுகள்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மா. பெரியசாமி

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதும் இந்தியா முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் பெருந்தலைவர் காமராஜர் மட்டும் கைது செய்யப்படவில்லை. காரணம் தன்னைப் பிரதமர் ஆக்கிய காமராஜருக்கு செய்த நன்றிக் கடனாகவும் இருக்கலாம்.

ஆனாலும் காமராஜர் அந்த நாட்களில் மகிழ்ச்சியாக இல்லை. தன்னால் பிரதமர் ஆக்கப்பட்டவர் இந்திய ஜனநாயகத்தைக் காலடியில் போட்டு நசுக்கிவிட்டாரே என்ற கவலை அவரின் மனதை மட்டுமின்றி உடல் நலனையும் வெகுவாகப் பாதிக்க 1976 அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி பிறந்த நாளில் மண்ணுலகத்தை விட்டுப் போய்விட்டார்.

அன்று அவருடைய மறைவுக்கு இந்திரா காந்தி நேரடியாக சென்னை வந்து அஞ்சலி செலுத்தினார். சில நாட்களில் அவருடைய ஸ்தாபனக் காங்கிரசின் கணிசமான பகுதியினர் கருப்பையா மூப்பனார் தலைமையில் இந்திரா கட்சியில் சங்கமமாயினர். அந்தக் கட்சிக்கு மூப்பனார் தலைவராகவும் ஆக்கப்பட்டார்.

காமராஜரின் மறைவு வரை வெறும் ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே இருந்த தமிழக இந்திரா காங்கிரஸ் பெருந்தலைவரின் மறைவுக்குப் பின் சற்று பலமுள்ள பரிமாணம் பெற்றது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x