Published : 27 Jun 2015 11:01 AM
Last Updated : 27 Jun 2015 11:01 AM

நெருக்கடிநிலையை ஆதரிக்க வேண்டாம்: செந்தில்

கட்டுரை:>நெருக்கடி நிலை இருண்ட காலத்தில்... நாடு சிறையானபோது சிறை என்னவானது?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் செந்தில் கருத்து:

நெருக்கடிநிலையை மக்களாட்சியில் நம்பிக்கை வைத்திருபவர்கள் அனைவரும் கண்டிக்கவேண்டும். மாறாக நமக்கு பிடிக்காதவர்கள் பா திக்கபட்டால் அதை கொச்சைப்படுத்துவது நியாயமில்லை.

சிட்டிபாபு காவலர்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்டார் என்பது உண்மை. தேர்தலில் தோற்காத கட்சி நாட்டில் உண்டா? கருணாநிதி நெருக்கடி நிலையை எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜார்ஜ் பெர்னாண்டஸ், வாஜ்பாயி மற்றும் பல மிசா சட்டத்தால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் கருணாநிதியின் எதிர்ப்பை அவர் செய்த உதவியை பதிவுசெய்துள்ளர்கள். பொதுமக்களாகிய நமக்கும் நெருக்கடிநிலையை ஆதரிக்க எக்காரணமும் வேண்டாம்.

இந்திராகாந்தி அவர்களுடன் அனுசரித்து கொண்டிருந்தால் திமுக பல பலன்களை அடைந்திருக்கும். ஆதலால் வரலாறு தெரியாமல் வாசகர்கள் கருத்து பதியவேண்டாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x