Published : 04 Jun 2015 07:00 PM
Last Updated : 04 Jun 2015 07:00 PM

ராகிப் பால்கூழ் போதுமே: ஸ்ரீ ராமச்சந்திரன்

செய்தி: மேகி - நெஸ்லே விவகாரம்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஸ்ரீராமச்சந்திரன் கருத்து:

முன்பெல்லாம் பிறந்த குழந்தைகளுக்கு சலித்து எடுத்த ராகியை கல் உரலில் நீர்விட்டு அரைத்து அதன் பாலெடுத்து குறுக்கி அதை பொடியாக்கி சற்று நெய் விட்டு கூழாக கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு வீட்டிலேயே கண்மை உண்டாக்குவார்கள்.

இந்த நிறுவனங்கள் அதை பெரிய அளவில் செய்து நமது பெண்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டன. எந்த வீட்டிலும் அம்மியும் இல்லை கல் உரலும் இல்லை. இதில் கலப்படமும் உண்டாம். பலாக்கொட்டையை நன்றாக காய வைத்து தோலுரித்து பொடியாக்கினால் வேறுபாடு தெரியாது. அதெல்லாம் ஒரு காலம்!

குறைந்த விலைக்கு கொடுக்க இந்த பொடி ஒரு சிறிய விகிதத்தில் கலக்கப்படுவதாக பல ஆண்டுகளுக்கு முன் படித்ததுண்டு. ஆகவே நம்மை முட்டாளாகி நம்மையே பாக்கெட் அடிக்கிறார்கள். என்னே நம் முட்டாள் தனம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x