Published : 17 Jun 2015 10:49 AM
Last Updated : 17 Jun 2015 10:49 AM

தென்னாட்டு வரலாற்றில் அரசுக்கு அக்கறையில்லை: ஹரி

செய்தி:>செங்கம் அருகேஅழிந்துவரும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள்: ஆய்வு செய்து பாதுகாக்க கோரிக்கை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஹரி கருத்து:

தொல்லியல் துறை தில்லி அரசிடம் உள்ளது. அவர்களுக்குத் தென்னாட்டு வரலாறு பற்றிய அக்கறையும் இல்லை. இன்னும் கேட்டால் அவர்கள் தென்னாட்டு வரலாற்றுச் சின்னங்களை ஆய்வு செய்யலாகாது எனக் கொள்கை முடிவும் கொண்டுள்ளனர். காணாமற் போன சரசுவதி ஆறு பற்றிய ஆராய்ச்சிக்குச் செலவிடும் தொகையில் சிறிதளவுக் கூட தென்னாட்டில் அவர்கள் செலவழிக்க முனைவதில்லை.

இந்தியா என்றால் வட இந்தியா அதாவது ஆரிய இந்தியா என்று நிலைநிறுத்த அவர்கள் பாடாய்ப் படுகின்றனர். முன்பு ஆட்சியில் இருந்தபோது சிந்து சமவெளி நாகரிக காலத்தில் குதிரைகள் இருந்தன என்று நிலை நிறுத்த எல்லா தகிடுதத்தங்களையும் செய்தனர்.

பன்னாட்டு வரலாற்றாசிரியர்கள் அதனை உடைத்தனர். அழிந்த மதுராவைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முனைபவர்கள் கடலுள் மூழ்கிய காவிரிப் பூம்பட்டினம் பற்றி ஆராய முனைவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x