Published : 17 Jun 2015 12:53 PM
Last Updated : 17 Jun 2015 12:53 PM

தகவல் அறியும் சட்ட முடக்கத்தின் விளைவு: அப்துல் கரீம்

தலையங்கம்:>ஆறுதலை மகிழ்ச்சியாகக் கொள்ள முடியுமா?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் அப்துல்கரீம் கருத்து:

தகுந்த நேரத்தில் வந்த சிறந்த தலையங்கம் இது. இதையெல்லாம் எப்படி புரிந்துகொள்வது என்கிற கேள்வியோடு நிறைவு பெற்றிருந்தது. இதற்கு எளிதாக கண்ணுக்கு தெரிகிற விடை என்னெவென்றால், ஜனநாயக அமைப்பு முறையையே இந்த அரசு விரும்பவில்லை என்பதுதான் அது. பாராளுமன்றத்திலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

சங்பரிவார்களுடைய திட்டமே அதுதான். அமைச்சர்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆளே இல்லாமல் இருந்தால், பதிலை எங்கிருந்து பெறுவது? தகவல் அறியும் சட்டமும் முடங்கிப்போனால், ஊழல் பெருச்சாளிகளுக்கு திருவிழா கொண்டாட்டமாகிவிடும்.

ஊழல்களே வெளிவராமல் போய்விடும். மக்களுடைய உரிமைக்குரல் நெரிக்கப்பட்டு விடும். 'நாங்கள் ஊழலே செய்யவில்லை, ஒரு வருடமாகியும் கரைபடியாத கரங்களாக இருக்கிறோம், அதுவே ஒரு சாதனைதான் - என்று ஆட்சியாளர்கள் பீற்றிக்கொள்வார்கள். இதையெல்லாம் மக்கள் மத்தியில் வெளிக்கொணரவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x