Published : 11 Jun 2015 02:21 PM
Last Updated : 11 Jun 2015 02:21 PM

தொழிலாளர்களுக்கு சுகாதாரம் முக்கியம்: அருணாச்சலம்

செய்தி:>கட்டுமான தொழிலாளர்களுக்கு தங்குமிடம், மருத்துவ வசதிகள் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க இயக்குநர் தகவல்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் எஸ்.அருணாசலம் கருத்து:

சென்னையில் இன்று வேகமாக கட்டுமான தொழில் நடந்து வரும் இடங்களில் குறிப்பிடவேண்டிய பகுதி பெரும்பாக்கம் இங்கு பல மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் காலையிலும், மாலையிலும் அந்த மக்கள் தங்களின் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.

அவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப 1 லிட்டர் 2 லிட்டர் பாட்டில்கள், டப்பாக்களுடன் ரோட்டோரங்களில் அலைகிறார்கள். இதைக் காணும்பொழுது மிகவும் வேதனையாக உள்ளது. கட்டுமான தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்ய நினைப்பது வரவேற்கத்தக்கது.

"திறந்த வெளிகளில் மலம் கழிக்காதீர்" என வெற்று கோஷம் போட்டுக்கொண்டு இருக்கிறோம், இது இந்தக் கட்டுமான தொழில் செய்யும் மிக பெரிய நிறுவனங்களுக்கு தெரியாதா? தமிழக சுகாதார மற்றும் தொழிலாளர்த் துறை இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x