Published : 04 Jun 2015 06:57 PM
Last Updated : 04 Jun 2015 06:57 PM

ஏரியின் கரைகளை மேலும் உயர்த்தலாம்: பாஸ்கரன்

கட்டுரை:>வீராணம் ஏரிப் படுகையில் ஒரு பயணம் - சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு ஏன்?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஆர்.வி.பாஸ்கரன் கருத்து:

6 தடுப்பு அணைகள், வீராணம் ஏரியில் தூர் வாருதல், ஏரியின் கரைகளை உயர்த்தி பலப்படுத்துதல், மதகுகளை சீர் செய்தல் போன்ற பல மேம்பட்ட பணிகள் செய்வற்கு அரசு செலவிட தயாராக இருக்கவேண்டும். இதை மறந்துவிட்டு, தேவை அற்ற உற்பத்தி நோக்கு அல்லாத இனங்களில் செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆண்டு தோறும் இத்தகைய பணிகளை செய்து முடிக்க சில கோடிகளை ஒதுக்க வேண்டும். அணையை சுற்றியுள்ள பாசன பகுதிகளுக்கு இதுவரை முறையாக வீராணம் ஏரியிலிருந்து திறந்துவிட்ட தண்ணீரின் அளவைக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை, அரசை சேர்ந்தது.

தடுப்பு அணைகள் மட்டும் இன்றி, சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து சிறு சிறு ஏறி, குளம், கண்மாய் போன்றவற்றினை செம்மனே சீர் செய்து, மழைக் காலங்களில் தண்ணீர் சேமிக்க வழி வகை செய்யலாமே ? அதற்காக, சில, பல கோடிகளை செலவு செய்வதில் தவறு ஒன்றும் இல்லையே ? உரியவர்கள் சிந்திப்பார்களா, செவி மடுப்பர்களா ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x