Published : 13 Jun 2015 04:49 PM
Last Updated : 13 Jun 2015 04:49 PM

இது தமிழன் மலையாளி பிரச்சனையில்லை: ஹசன்

கட்டுரை:>தமிழ்க் கரையோரம் தடுமாறும் மலையாளம்!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஹசன் கருத்து:

குமரி மாவட்டத்தில் தலைமுறை தலைமுறையாக வாழும் மொழிசிறுபான்மை மக்கள் அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை பறிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தால் அதை தமிழன் மலையாளி பிரச்சனை என திசைதிருப்ப முயலும் முயற்சிகள் குமரி மாவட்டத்தில் விலைபோகாது.

தமிழை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் ஆங்கில மோகத்தில் தாய்மொழிக் கல்வியை அழிப்பதை நாம் அறிவோம். தமிழகத்தில் தமிழ் எங்கே என்று தேடுங்கள்; கேரளாவில் தமிழுக்கு எந்த ஆபத்தும் இல்லை; எந்த தமிழ்ப் பள்ளியும் மூடப்படவில்லை; எந்த தமிழாசிரியரும் வேலையிழக்கவில்லை.

தமிழகம் வேலை கொடுக்க மறுத்த பல தமிழாசிரியர்கள் இடுக்கி மாவட்டத்தில் கேரள அரசுப் பள்ளிகளில் பணிபுரிகிறார்கள். கண்ணை திறந்து பாருங்கள்; குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டாதீர்கள். உண்மையை துணிச்சலாக எழுதிய ஜாண் மோசேஸ் ராஜ்க்கு பாராட்டுக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x