Published : 11 Jun 2015 02:21 PM
Last Updated : 11 Jun 2015 02:21 PM

பகட்டுக்காகவா பள்ளிக் கூடங்கள்? - சுந்தர்

கட்டுரை:>ஒரு டேஷ் அகாடமி எழுப்பவைத்த 'பள்ளிக் கல்வி' கேள்விகள்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சுந்தர் கருத்து:

பள்ளியில் சேர்ப்பதில், ஆண்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் சிறிது பரிசோதனை செய்து பார்க்க தயாராக இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் பெண்கள் சிறிதும் இதில் தயாராக இல்லை. அவர்கள், வெளிப்பார்வைக்கு பள்ளி பகட்டாக இருப்பதையும் குழந்தைகள் டை, பூட், சாக்ஸ் போட்டுக்கொண்டு போவதையும் விரும்புகிறார்கள்.

இன்னொரு பெண்ணிடம் பேசும்போது பிள்ளைகளின் பள்ளிபெயர் ஒரு அந்தஸ்தைக் குறிக்கும சின்னமாகவே உச்சரிக்கப் படுகிறது. 40 வருஷங்களுக்கு முன்னர் கூட பெரும்பாலும் மானேஜ்மென்ட் அல்லது கிறிஸ்டியன் ஸ்கூலில்தான் சேர்ப்பார்கள். அரசு/பஞ்சாயத் ஸ்கூலில் சேர்ந்து படிப்பது சிறிது நெருடலான விஷயம்தான்.

ஆனால் பஞ்சாயத்து ஸ்கூல் பையனிடம், விஷயம் தெரிந்தவர்கள், படிப்பு பற்றி சில கேள்விகள் கேட்டு, வாத்தியார் பெயர்களையும் சப்ஜட்களையும் கேட்பார்கள். அதன் அடிப்படையில் விஷயம் தெளிவாகிவிடும். பள்ளிக் குழந்தை ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாகவாவது பேசவேண்டும் என்கிற நிலைமை அப்போது இல்லாமல் இருந்ததால், எல்லாப்பள்ளியும் ஒன்றுதான் என்கிற மாதிரி இருந்தது. ஸ்கூல் யூனிபாம் விஷயத்திலும் பெரிய கெடுபிடி கிடையாது. படிப்பு கொஞ்சம் விளையாட்டு அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x