Published : 12 Jun 2015 06:50 PM
Last Updated : 12 Jun 2015 06:50 PM

படவுலகில் நேர்மை குறைவு செயல்கள் அதிகரிக்கின்றன: சிவக்குமார்

நேர்காணல்:>கதையைத் திருடியவன் காரில் செல்கிறான்!- இயக்குநர் தருண்கோபி சிறப்பு பேட்டி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சிவக்குமார் கருத்து:

கோடம்பாக்கத்தில் தினமும் ஒரு திரைப்படம் முழுமையடைய குரூப்பாக கதை விவாதம் நடத்துவது என்பது காலம் காலமாய் நடப்பதுதான்! அன்று கதை எழுதுபவர்.. திரைகதை எழுதுபவர்.. இயக்குபவர் தனி.! ஆனால் படவிவாதம் கூட்டு முயற்சி!

காலங்கள் மாறி ரைட்ஸ் பிரச்சனையில் எல்லாரும் ஒருவராக பெயரில் அறியப்பட உண்மையில் படக்காட்சிகள் பலர் கூற உருவான படம் (எங்கிருந்து உருவல் என்பது தனிகதை) பின்னர் அதுவும் உருவப்பட்டு தங்கள் படங்களில் வைத்த இயக்குநர்கள் இன்று படத்தையே சாமர்த்தியம் இருந்தால் உருவிவிட்டு தன் பெயரில் படமாக்கும் நேர்மைகுறைவான தந்திர செயல்கள் படவுகில் அதிகரித்து வருகின்றன..!

சமீபத்திய மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களும் ஆதாரபூர்வமாக நிருபித்தும்? அதற்கு ஸ்டார் ஹோட்டலில் கட்ட பஞ்சாயத்து நடந்த கதைகள் சொல்லும் வேதனை செய்திகள் தனிகதை.!

உண்மையில் சமீபகாலமாக கதைவிவாதம் நம்பக தன்மையை இழந்து யாரோ ஒருவர் பிளாக்மெயில் செய்யும் தொழிலாக மாறுவது தமிழ்சினிமா உலகம் எதிர்பாராதது! உதாரணம்: லிங்கா! அடுத்தமொழி, வெளிநாட்டு சினிமா என கதை மற்றும் காட்சிகளை டிவிடியில் இருந்து உருவுவதில் யார் முந்திக்கொள்வது என்பது அவரவர் படமெடுக்கும் வேகத்தை பொருத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x