Published : 06 May 2015 06:10 PM
Last Updated : 06 May 2015 06:10 PM

இவர்களும் இருப்பார்களே.. என்ன செய்வது? - செம்பியன்

செய்தி:>தமிழகத்துக்கு மாவோயிஸ்ட்கள் வருவதற்கு காரணம் என்ன?- கைது செய்ய கியூ பிரிவு போலீஸார் தீவிரம்

' தி இந்து' ஆன்லைன் வாசகர் செம்பியன் கருத்து:

மக்கள் நல அரசாக இருந்தால், ஏன் மாவோயிஸ்டுகள் அரசுக்கு எதிராக் போராட்டம் நடத்துகிறார்கள்? ஒரு ரூபாய் வரி வருமானத்தில், அரசு ஊழியர்/அரசியல்வாதி திருட்டு பங்கு 85 பைசாவாக இருந்தால், மக்கள் என்ன செய்வார்கள்?

கேள்வி கேட்பவன் தீவிரவாதி என்றால், கொள்ளையடிப்பவன்??-நான் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கவில்லை.. ஆனால் இவர்களின் இருப்புக்கு காரணம் அரசு அதிகாரிகள்/அரசியல் வாதிகளே. ஒரு சாதாரண அரசு அதிகாரி எப்படி கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கு அதிபதி ஆகிறார்?

கேள்விகேட்டால் மிரட்டல் வருகிறதே? ஏன்? அவர் தின்றது யாருடைய பணம்? கார்ப்போரேட் அடிமை அரசுகள் இருக்கும் வரை இவர்களும் இருப்பார்களே.. என்ன செய்வது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x