Published : 29 May 2015 04:36 PM
Last Updated : 29 May 2015 04:36 PM

காந்தி நேருவிடம் நாகரிகத்தை கற்கவும் - சந்திரசேகரன்

இப்படிக்கு இவர்கள்:>வளர்ச்சியின் அடிப்படை நேருதான்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஈ.எஸ்.சந்திரசேகரன் கருத்து:

நேரு அவர்களும் காந்தி அவர்களும் கிட்டத்தட்ட இரு துருவங்கள் என சொல்லலாம். ஆனால் ஒருபொழுதும் இரு தலைவர்களும் வரம்பு மீறி ஒருவரையொருவர் பேசியதில்லை. இன்றைய அரசில்வாதிகள் முதலில் இதை கற்றுக் கொள்ளவேண்டும்.

சோனியா காந்தி கறுப்பினத்தவராக இருந்திருந்தால் ராஜீவ் காந்தி அவருக்கு காங்கிரஸில் தலைவி பொறுப்பை கொடுத்திருக்க மாட்டார் என்று இன்று பதவியில் உள்ள ஒரு பாஜக மந்திரி சொன்னது, இன்றைய அரசியல் எத்தனை கேவலமாக போய்விட்டது என்று சொல்லாமல் சொல்கிறது.

ஆக இன்றைய அரசியல்வாதிகள் சுயநலவாதிகளாக தான் இருக்கிறார்கள். எத்தனை காந்திகள் நேருகள் வந்தாலும் நம் அரசியல்வாதிகள் திருந்தப் போவதில்லை. ஐயகோ! காந்தி மகான் அவர்களே, நேரு மாமா அவர்களே இந்தியாவில் மீண்டும் பிறக்கவேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x