Published : 28 May 2015 06:53 PM
Last Updated : 28 May 2015 06:53 PM

குடிப்பதை நிறுத்தினால் அரசு மூடிவிடும் - சுந்தரம்

> ட்வீட்டாம்லேட்: மதுவுக்கு எதிராக தொடரும் ட்வீட் போராட்டம்!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சுந்தரம் கருத்து:

தமிழ் நாடு அரசு மேலும் டாஸ்மாக் கடைகளை திறப்பதை நிறுத்த வேண்டும். பள்ளிக்கூடம், கல்லூரிகள் மற்றும் புனித தலங்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு மீண்டும் உரிமம் தர கூடாது.

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக வருடத்துக்கு குருப்பிட எண்ணிக்கையில் குறைத்து வருவதன் மூலம் மது பிடியிலிருந்து தமிழ் நாட்டை நாம் காப்பாற்ற முடியும். தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் ஓட்டு ஒன்றுக்காக தனது மக்களையே மது கொடுமைக்கு அடிமைப் படுத்திருப்பதை நாம் அறிய முடியும்.

மக்களும் எல்லாமே இலவசமாக கிடைக்க வேண்டும் என நினைப்பதை நிறுத்த வேண்டும். மதுவை நான் குறைத்துக் கொள்வேன் என உறுதி எடுப்பதன் மூலம் மற்றும் டாஸ்மாக் அருகில் செல்லாமல் இருப்பதன் மூலம் தன்னாலே அரசு இக்கடைகளை குறைத்து கொள்ளும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x