Published : 30 May 2015 02:41 PM
Last Updated : 30 May 2015 02:41 PM

மருந்துகளின் விலையைக் குறைத்திடுக: சக்திவேல்

தலையங்கம்:>இந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சக்திவேல் கருத்து:

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மத்திய அரசும் தான் செய்வதாக சொன்னவைகளை செய்வதை விடுத்து சென்ற ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டும், அவர்கள் செய்தார்களா? என்று தேவைற்ற கேள்விகளை கேட்டுக் கொண்டும் காலத்தை ஓட்டுகின்றனர்.

அவர்கள் செய்யவில்லை என்பதற்காகத்தான் தங்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற அடிப்படை விஷயத்தைக்கூட புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது அனைத்து விஷயத்திலும் இருக்கிறது. இதில் குடிமக்களின் உயிரைப் பற்றி அவர்களுக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது. உயிர்காக்கும் மருந்துகளின் விலையை குறைத்து அவற்றை முறைப்படுத்துதல் மத்திய அரசின் கையில் இருக்கும் போது அதனைக்கூட செய்ய மறுப்பது வருந்ததக்கது.

மருத்துவம் என்பது சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டியது. மத்திய மாநில அரசுகள் பொதுமக்களின் நலனுக்காக சுகாதாரத்திற்காக செலவு செய்வதைப் போலவே மருத்துவ பொருட்களின் விலையையும் கட்டுக்குள் வைப்பது அத்தியாவசியமான நடவடிக்கை என்பதை மத்திய அரசு உணர்ந்து செயல்படவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x