Published : 07 May 2015 03:19 PM
Last Updated : 07 May 2015 03:19 PM

பிஸ்என்எல்... புதுரத்தம் ஏற்றுங்கள்: முருகன்

செய்தி:>பிஎஸ்என்எல் சேவை குறைபாடுகள்: மக்களவையில் பாஜக சாடலை வரவேற்ற எதிர்க்கட்சிகள்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் முருகன் கருத்து:

ஏர் இந்தியா, பிஎஸ்என்எல் நன்றாக இயங்கவேண்டும் என்றால் அரசு, ஊழியர் அனைவருக்கும் இருக்கிற ரத்தத்தை மாற்றிவிட்டு புது ரத்தம் ஏற்றினால்தான் உண்டு. தனியாரில் பணியாற்றும் எங்களுக்கு உள்ள பணி பற்றிய பயம் அவர்களுக்குத்தான் இல்லையே. பின்னே ஏன் அவர்கள் வேலை பார்க்கனும்?

பத்தாததுக்கு ஊழியர் சங்கம் இருக்கிறது. பவர் ஹவுஸ் எக்ஸ்சேஞ்சில் வாடிக்கையாளர் சேவை மையத்தில், பெண் வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் இருக்கையிலேயே அதிகாரியை அட்சர சுத்த கெட்ட வார்த்தையால்திட்டிக்கொண்டிருந்தார் இன்னொரு பிஎஸ்என்எல் அதிகாரி.

இது போன்ற ஊழியர்கள் திருந்தவேண்டும் என்றால் பிஎஸ்என்எலும் திருத்தங்கள் வேண்டும். மாற்றங்களைக் கொண்டுவாருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x